உள்ளூர் செய்திகள்

சிறப்பு முகாம்களில் இருந்து இலங்கை தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும்- சீமான்

Published On 2022-06-21 07:21 GMT   |   Update On 2022-06-21 07:21 GMT
  • தமிழகத்தில் ஈழச் சொந்தங்களை, ‘சிறப்பு முகாம்’ எனும் வதை கூடங்களில் இருந்து உடனே விடுதலை செய்ய வேண்டும்.
  • ஈழ உறவுகளைக் கண்காணிப்பதாகக் கூறி, நாளும் வதைத்து வரும் காவல்துறையின் ‘கியூ’ பிரிவினைக் கலைக்க வேண்டும்.

சென்னை:

நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஈழ நிலத்தில் நடந்தேறிய இனப்படுகொலையால் தாய் மண்ணைவிட்டுப் பிரிந்து, உலகம் முழுமைக்கும் அகதிகளாக இடம்பெயர்ந்து, இந்நூற்றாண்டின் மிகப்பெரிய இனஅழிவுக்கு ஆளான தமிழர்களைப் போல அதன் வலியை உணர்ந்த ஒரு இனக்கூட்டமில்லை.

தமிழகத்தில் ஈழச் சொந்தங்களை, 'சிறப்பு முகாம்' எனும் வதை கூடங்களில் இருந்து உடனே விடுதலை செய்து திபெத்தியர்களுக்கு இந்நாட்டில் செய்து தரப்படுவது போலவே, அடிப்படையான வசதிகளையும், வாழ்வாதார வாய்ப்புகளையும் உருவாக்கித்தந்து, அவர்களுக்கான உண்மையான மறுவாழ்வை ஏற்படுத்தித் தர வேண்டும், ஈழ உறவுகளைக் கண்காணிப்பதாகக் கூறி, நாளும் வதைத்து வரும் காவல்துறையின் 'கியூ' பிரிவினைக் கலைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News