பெருங்களத்தூர் மேம்பாலத்தின் ஒரு பகுதி இந்த மாத இறுதியில் முடிவடையும்
- சென்னை பெருங்களத்தூர் பகுதியில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது.
- பெருங்களத்தூர் பஸ் நிலையத்தில் மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது.
தாம்பரம்:
சென்னை பெருங்களத்தூர் பகுதியில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது.
சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள், கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் பெருங்களத்தூர் வழியாகவே செல்வதால் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் திணறுகிறார்கள். குறிப்பாக விடுமுறை நாட்களில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இந்த போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் பெருங்களத்தூர் பஸ் நிலையத்தில் மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது.
இந்த மேம்பாலம் தாம்பரத்தில் இருந்து வண்டலூர், வண்ட லூரில் இருந்து தாம்பரம் செல்லும் திசையிலும், சதானந்தபுரம், நெடுங் குன்றம் வழியாக வண்ட லூர்-கேளம்பாக்கம் சாலைக்கு செல்லும் வகை யிலும், பெருங்களத்தூர் ரெயில்வே தண்டவாளத்தின் மேல்புறம் வழியாக பெருங் களத்தூர் ஊருக்குள் செல்லும் வகையிலும் கட்டப்பட்டு வருகிறது.
தாம்பரம்-வண்டலூர் சாலையின் இரு திசைகளி லும் 1.2 கி.மீ தூரத்துக்கு மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. தாம்பரம் கிழக்கு புறவழிச்சாலை வழியாக சதானந்தபுரம் நோக்கி 750 மீட்டர் தூரத்துக்கு பாலம் அமைகிறது. பெருங்களத் தூரில் தண்டவாளத்தை தாண்டி செல்லும் வகையில் 800 மீட்டர் தூரத்துக்கு பாலம் அமைக்கப்படுகிறது.
ரூ.235 கோடி மதிப்பில் பாலம் கட்டுமான பணிகள் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங் கப்பட்டது. வருகிற டிசம்பர் மாதத்துக்குள் பாலத்தை கட்டி முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
ஆனால் பெருங்களத்தூர் பஸ் நிலையத்தில் உள்ள கடைகள், சதானந்தபுரம் மற்றும் பெருங்களத்தூர் பகுதிகளில் நிலம் கையகப் படுத்துதலில் தாமதம் ஏற் பட்டு வருகிறது. இதன் காரணமாக ஜி.எஸ்.டி. சாலையில் போக்குவரத்து நெரிசல் தொடரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் பெருங் களத்தூர் மேம்பாலத்தில் வண்டலூர்-தாம்பரம் இடையே இரு திசைகளிலும் செல்வதற்கான பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. இந்த மாத இறுதிக்குள் இந்த திசையில் கட்டுமான பணிகள் முடிந்து பாலம் திறப்புவிழாவுக்கு தயாராகி விடும்.
மேலும் தண்டவாளத்தை தாண்டி ஸ்ரீநிவாசன் ராகவன் தெருவில் இறங்கி புதிய பெருங்களத்தூர் செல்லும் பாலம் வருகிற நவம்பர் அல்லது டிசம்பர் மாதம் தயாராகி விடும் என்று நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், 'புதிய பெருங் களத்தூர், பீர்க்கங்கரணை நோக்கி செல்லும் பாலம் பணிகள் முடிந்தால் ஜி.எஸ்.டி. சாலையில் போக்கு வரத்து நெரிசல் குறையும். பெருங்களத்தூர் பஸ் நிலையத்தை கிளாம்பாக் கத்துக்கு மாற்ற போக்கு வரத்து துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளோம்.
கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையம் திறக்கப்பட்டதும் ஜி.எஸ்.டி. சாலையில் நெரிசல் கணிசமாக குறையும்' என்றனர்.