உள்ளூர் செய்திகள்

மாமல்லபுரம் அருகே சிற்பி தற்கொலை

Published On 2023-06-16 12:29 IST   |   Update On 2023-06-16 12:29:00 IST
  • வீட்டில் இருந்த அவர் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
  • தற்கொலை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாமல்லபுரம்:

மாமல்லபுரம் அடுத்த காரணையை சேர்ந்தவர் குமார் (வயது 56). சிற்பி. இவர், அதே பகுதியில் சிற்ப பட்டறை நடத்தி வந்தார்.

வீட்டில் இருந்த அவர் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மாமல்லபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News