உள்ளூர் செய்திகள்

முறை தவறிய உறவால் குழந்தை பெற்றெடுத்த பள்ளி மாணவி

Published On 2022-10-12 07:42 GMT   |   Update On 2022-10-12 07:48 GMT
  • பிரசவ வலி ஏற்பட்டு மாணவி ஆஸ்பத்திரிக்கு சென்ற போதுதான் அவரது நிலை வெளியில் தெரிந்தது.
  • மாணவியின் சொந்த ஊர் கடலூர் ஆகும். அவரது பெற்றோர் கூலித்தொழிலாளர்கள்.

திருவொற்றியூர்:

திருவொற்றியூர், ராமகிருஷ்ணா நகர், காந்தி தெருவை சேர்ந்த 15 வயது சிறுமி வண்ணாரப்பேட்டை எம்.சி.ரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

நேற்றுமாலை மாணவிக்கு திடீரென வயிறு வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை ராயபுரம் ஆர்.எஸ்.ஆர்.எம். அரசு ஆஸ்பத்திரிக்கு பரிசோதனைக்காக தாய் அழைத்துச் சென்றார்.

அப்போது மாணவி 10 மாதம் கர்ப்பமாக இருப்பதை கண்டு டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதற்குள் மாணவிக்கு பிரசவ வலி ஏற்பட்டது.

உடனடியாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிறிது நேரத்தில் மாணவிக்கு ஆண் குழந்தை பிறந்தது. மகள் இதுநாள் வரை கர்ப்பமாக இருப்பது தெரியாமல் இருந்த தாய் அதிர்ச்சியில் உறைந்து கதறி துடித்தார்.

இதுகுறித்து திருவொற்றியூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து மாணவியிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது கடந்த பத்து மாதங்களுக்கு முன்பு வீட்டுக்கு வந்த சித்தியின் மகன் முகேஷ் என்பவர் முறைதவறி மாணவியுடன் தகாத முறையில் நடந்து உள்ளார். இதில் கர்ப்பமான மாணவி இதுபற்றி பெற்றோருக்கு தெரியாமல் மறைத்து வந்துள்ளார்.

மேலும் பள்ளிக்கும் வழக்கம்போல் சென்று வந்தார். இதனால் அவர் மீது பள்ளியிலும் மற்றும் பெற்றோருக்கும் சந்தேகம் ஏற்படவில்லை.

இந்த நிலையில் பிரசவ வலி ஏற்பட்டு மாணவி ஆஸ்பத்திரிக்கு சென்ற போதுதான் அவரது நிலை வெளியில் தெரிந்தது. மாணவியின் சொந்த ஊர் கடலூர் ஆகும். அவரது பெற்றோர் கூலித்தொழிலாளர்கள்.

அவர்கள் திருவொற்றியூரில் தங்கி வேலைக்கு சென்று வருகிறார்கள். மாணவி அவர்களுக்கு ஒரே மகள் ஆவார். மகளின் நிலையால் பெற்றோர் துடித்து போய் உள்ளனர்.

இந்தநிலையில் மாணவியை கர்ப்பமாக்கிய கடலூர் மாவட்டத்தை சேர்ந்த உறவினரான முகேஷ் என்பவர் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். தலைமறைவாக உள்ள முகேசை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News