உள்ளூர் செய்திகள்
திருவள்ளூர் அருகே மணல் கடத்திய 5 பேர் கைது
- மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய 3 ஜே.சி.பி. எந்திரம் மற்றும் 2 லாரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
- தப்பி ஓடிய 4பேரை தேடிவருகிறார்கள்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் அடுத்த கொட்டையூர் கிராமத்தில் சவுடு மண் கடத்தப்படுவதாக மப்பேடு போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் போலீசார் அங்கு சென்றபோது மண் திருட்டில் ஈடுபட்ட 5 பேரை மடக்கி பிடித்தனர்.
மேலும் மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய 3 ஜே.சி.பி. எந்திரம் மற்றும் 2 லாரிகளை பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய 4பேரை தேடிவருகிறார்கள்.