உள்ளூர் செய்திகள்

கொசு விரட்டும் லிக்விட் இயந்திரத்தால் தீவிபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு

Published On 2023-08-19 04:24 GMT   |   Update On 2023-08-19 04:32 GMT
  • கொசு விரட்டும் லிக்விட் இயந்திரம் சூடாகி உருகியதுடன் அட்டைப்பெட்டியின் மீது விழுந்து தீப்பிடித்துள்ளது.
  • தீ பிடித்ததால் வீடு முழுவதும் புகை மூட்டம் ஏற்பட்டுள்ளது.

சென்னை மணலி அருகே வீட்டில் வைக்கப்பட்டு இருந்த கொசு விரட்டும் லிக்விட் இயந்திரத்தால் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியாகியுள்ளனர்.

கொசு விரட்டும் லிக்விட் இயந்திரம் சூடாகி உருகியதுடன் அட்டைப்பெட்டியின் மீது விழுந்து தீப்பிடித்துள்ளது. தீ பிடித்ததால் வீடு முழுவதும் புகை மூட்டம் ஏற்பட்டுள்ளது. புகை மூட்டத்தால் மூச்சு திணறி சந்தான லட்சுமி, அவரது 3 பேத்திகள் உயிரிழந்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News