உள்ளூர் செய்திகள்
ஊட்டச்சத்து குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு
ஊராட்சி அங்கன்வாடியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்ட தேசிய ஊட்டச்சத்து மாத விழா நடைபெற்றது.
பென்னேரி:
மீஞ்சூர் அடுத்த நெய்த வாயல் ஊராட்சி அங்கன்வாடியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்ட தேசிய ஊட்டச்சத்து மாத விழா நடைபெற்றது.
மீஞ்சூர் ஒன்றியத்தில் 207 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் 165 பணியாளர்கள் உள்ள நிலையில் ஊட்டச்சத்து மாத விழா குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தொடக்க விழா நடைபெற்றது. துரை சந்திரசேகர் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு விழிப்புணர்வு ஜோதியை ஏற்றி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் ஊட்டச் சத்து உறுதிமொழி ஏற்கப் பட்டது.
இதில் மீஞ்சூர் சேர்மன் ரவி, ஊராட்சி மன்ற தலைவர் பாலன், துணைத் தலைவர் ராஜேஷ், அங்கன்வாடி ஒருங்கி ணைப்பாளர் மோகனா மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.