உள்ளூர் செய்திகள்

பேனர் கிழிக்கப்பட்டதை கண்டித்து திருப்பூரில் பா.ஜ.க.வினர் போராட்டம்

Published On 2024-02-24 08:01 GMT   |   Update On 2024-02-24 08:01 GMT
  • பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் சார்பில் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது.
  • பேனர்களை நள்ளிரவு மர்ம நபர்கள் சிலர் கிழித்து சேதப்படுத்தி உள்ளனர்.

திருப்பூர்:

திருப்பூர் மாவட்டம் பல்லடம் மாதப்பூரில் வருகிற 27-ந்தேதி நடைபெறும் பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி வருகை தர உள்ளார். அவரை வரவேற்று திருப்பூரில் பல்வேறு பகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் சார்பில் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் திருப்பூர் புதிய பேருந்து நிலையம் எதிரே வைக்கப்பட்டிருந்த பேனர்களை நள்ளிரவு மர்ம நபர்கள் சிலர் கிழித்து சேதப்படுத்தி உள்ளனர். இதையறிந்த அக்கட்சி நிர்வாகிகள் இன்று காலை புதிய பேருந்து நிலையம் முன் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பேனர்களை கிழித்த நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து பா.ஜ.க.வினர் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News