உள்ளூர் செய்திகள்

வடசென்னை அனல்மின் நிலையத்தில் 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

Published On 2023-06-05 08:45 GMT   |   Update On 2023-06-05 08:46 GMT
  • மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டில் வடசென்னை அனல்மின் நிலையம் உள்ளது.
  • தொழில் நுட்பகோளாறை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

பொன்னேரி:

மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டில் வடசென்னை அனல்மின் நிலையம் உள்ளது. இங்குள்ள இரு நிலைகளில் முதல் நிலையின் 3 அலகுகளில் தலா 210 வீதம் 630 மெகாவாட், 2-வது நிலையில் உள்ள இரு அலகுகளில் தலா 600 வீதம் 1200 மெகாவாட் என மொத்தம் நாளொன்றுக்கு 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்த நிலையில் 1-வது நிலையின் 2, 3-ம் அலகுகளில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதன்காரணமாக 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. தொழில் நுட்பகோளாறை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

Tags:    

Similar News