உள்ளூர் செய்திகள்

பூந்தமல்லி அருகே விடுதியில் இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை

Published On 2023-02-18 15:00 IST   |   Update On 2023-02-18 15:00:00 IST
  • செல்போனில் பேசிக் கொண்டிருந்தவர் திடீரென்று அறைக்கு சென்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
  • இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர்:

நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. கூலித் தொழிலாளி. இவரது மகள் தாரணி (வயது18). இவர் பூந்தமல்லி அருகே புதுசத்திரம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தங்கி காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் பகுதியில் இயங்கும் தனியார் செல்போன் உதிரி பாகம் தயாரிக்கும் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார்.

இவர் நேற்று இரவு வெகு நேரம் செல்போனில் பேசிக் கொண்டிருந்தவர் திடீரென்று அறைக்கு சென்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். வெள்ளவேடு போலீசார் அவரது பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் எதற்காக தற்கொலை செய்தார் என்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News