உள்ளூர் செய்திகள்

பொன்னேரி அருகே இளம்பெண் தற்கொலை

Published On 2023-03-23 14:10 IST   |   Update On 2023-03-23 16:21:00 IST
  • வீட்டில் இருந்த கல்பனா திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
  • பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

பொன்னேரி அடுத்த விட தண்டலம் கிராமத்தைச் சேர்ந்தவர் கல்பனா (வயது44).கடந்த சில மாதங்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டு இருந்தார். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை. இதனால் அவர் மனவேதனையில் இருந்தார்.

இந்த நிலையில் வீட்டில் இருந்த கல்பனா திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News