உள்ளூர் செய்திகள்

பொன்னேரியில் கடையில் நூதனமுறையில் செல்போன் கொள்ளை

Published On 2023-03-26 12:35 IST   |   Update On 2023-03-26 12:35:00 IST
  • பொன்னேரி போலீஸ் நிலையத்தில் செல்போன் கடை சங்கம் சார்பில் நிர்வாகிகள் புகார் மனு அளித்தனர்.
  • போலீசார் கடையில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து நூதன முறையில் செல்போன் கொள்ளையில் ஈடுபட்ட வாலிபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பொன்னேரி:

பொன்னேரி, டி.எச். சாலையில் செல்போன் கடை நடத்தி வருபவர் நாகராஜ். இவர் கடையில் வியாபரம் செய்து கொண்டு இருந்தபோது மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர்.

அவர்களில் ஒருவன் மட்டும் செல்போன் வாங்குவது போல் செல்போன், ஹெட்போன், சார்ஜர், ஆகியவற்றை வாங்கி பார்த்தார். சிறிது நேரம் கழித்து உடன் வந்த மற்றொரு வாலிபர் கடையில் இருந்து வெளியே சென்று தாங்கள் வந்த மோட்டார் சைக்கிள் அருகே நின்றான்.

கடையில் இருந்த வாலிபர் வேறு மாடல் செல்போனை எடுத்து காட்டும்படி கூறினார். இதையடுத்து கடை ஊழியர் வேறு ஒரு புதிய செல்போன் எடுப்பதற்காக திரும்பினார்.

அந்த நேரத்தில் கடையில் இருந்த வாலிபர் காண்பிப்பதற்காக வைத்திருந்த புதிய செல்போன் மற்றும் ஹெட் போன் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு வெளியில் மோட்டார் சைக்கிளில் தயாராக நின்ற கூட்டாளியுடன் தப்பி சென்று விட்டார்.

இதுகுறித்து பொன்னேரி போலீஸ் நிலையத்தில் செல்போன் கடை சங்கம் சார்பில் நிர்வாகிகள் புகார் மனு அளித்தனர்.

போலீசார் கடையில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து நூதன முறையில் செல்போன் கொள்ளையில் ஈடுபட்ட வாலிபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பொன்னேரி பகுதியில் இதுபோன்று அடிக்கடி செல்போன் பறிப்பு மற்றும் கொள்ளை நடப்பதாகவும் இதுகுறித்து போலீசார் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் செல்போன் கடை வியாபாரிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

Similar News