உள்ளூர் செய்திகள்

பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை

Published On 2022-09-27 08:48 GMT   |   Update On 2022-09-27 08:48 GMT
  • பொன்னேரி அடுத்த சின்ன காவனம் சிவன் கோயில் தெருவில் தீயணைப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது.
  • தீயணைப்பு அலுவலர்களுக்கான குடியிருப்பு கட்ட திட்டமிடப்பட்டு உள்ளது.

பொன்னேரி:

பொன்னேரி அடுத்த சின்ன காவனம் சிவன் கோயில் தெருவில் தீயணைப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது. அதன் அருகில் தீயணைப்பு அலுவலர்களுக்கான குடியிருப்பு கட்ட திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச்செய்தனர். இது தொடர்பாக பொன்னேரி ஆர்.டி.ஓ. காயத்ரி தலைமையில் வட்டாட்சியர் செல்வகுமார், தீயணைப்பு நிலைய அலுவலர் சம்பத் மற்றும் அப்பகுதி மக்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Similar News