உள்ளூர் செய்திகள்

செல்போனுக்கு குறுந்தகவல் அனுப்பி மோசடி: பரிசு விழுந்ததாக 'லிங்க்' அனுப்பி வங்கி கணக்கில் ரூ.30 ஆயிரம் அபேஸ்

Published On 2023-10-25 08:22 GMT   |   Update On 2023-10-25 08:22 GMT
  • கிரெடிட் கார்டு கணக்கில் இருந்து ரூ.30 ஆயிரம் எடுக்கப்பட்டதாக செல்போனுக்கு குறுந்தகவல் வந்ததை கண்டு அனிஷ் அதிர்ச்சி அடைந்தார்.
  • விருகம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருகம்பாக்கம், நடேசன் நகர் பகுதியை சேர்ந்தவர் அனிஷ் அகமது. தனியார் நிறுவன ஊழியர். இவர் பிரபல தனியார் வங்கியின் "கிரெடிட் கார்டு" பயன்படுத்தி வருகிறார். இந்த நிலையில் அனிஷ் செல்போனுக்கு குறுந்தகவல் ஒன்று வந்தது. அதில் ரூ.5ஆயிரம் பரிசு கிடைத்துள்ளது என்று குறிப்பிட்டு "லிங்க்" ஒன்று வந்தது. இதை உண்மை என்று நம்பிய அவர் அந்த "லிங்க்"கை பயன்படுத்தி தனது கிரெடிட் கார்டின் எண் மற்றும் தகவல்களை ஒவ்வொன்றாக பதிவு செய்தார். பின்னர் ரகசிய ஓ.டி.பி எண்ணையும் பதிவு செய்தார்.

சிறிது நேரத்தில் அவரது "கிரெடிட் கார்டு" கணக்கில் இருந்து ரூ.30 ஆயிரம் எடுக்கப்பட்டதாக செல்போனுக்கு குறுந்தகவல் வந்ததை கண்டு அனிஷ் அதிர்ச்சி அடைந்தார். வங்கியில் இருந்து அனுப்புவது போல் குறுந்தகவல் அனுப்பி நூதனமான முறையில் மர்மநபர்கள் பணத்தை சுருட்டி சென்றது தெரியவந்தது.

இந்த கும்பல் இதேபோல் மேலும் பலருக்கு பரிசு விழுந்து இருப்பதாக 'லிங்க்' அனுப்பி மோசடியில் ஈடுபட்டு இருக்கலாம் என்று தெரிகிறது. இதுகுறித்து விருகம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News