உள்ளூர் செய்திகள்

பண்ணாரி சோதனை சாவடியில் குடிபோதையில் பணியாற்றிய போலீஸ் ஏட்டு சஸ்பெண்டு

Published On 2022-12-28 10:23 GMT   |   Update On 2022-12-28 10:23 GMT
  • விசாரணையில் போலீஸ் ஏட்டு வெங்கடேஸ்வரன் குடிபோதையில் பணியில் இருந்தது தெரியவந்தது.
  • போலீஸ் ஏட்டு வெங்கடேஸ்வரனை சஸ்பெண்டு செய்து போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவிட்டார்.

சத்தியமங்கலம்:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருபவர் வெங்கடேஸ்வரன். சம்பவத்தன்று இவர் பண்ணாரி சோதனை சாவடி பணிக்கு அனுப்பப்பட்டார்.

அப்போது பணியில் இருந்த போலீஸ் ஏட்டு வெங்கடேஸ்வரன் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சிலர் போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் கவனத்துக்கு கொண்டு சென்றனர். இதையடுத்து உடனடியாக போலீஸ் ஏட்டு வெங்கடேஸ்வரனை ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.

மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தவும் உத்தரவிட்டார். விசாரணையில் போலீஸ் ஏட்டு வெங்கடேஸ்வரன் குடிபோதையில் பணியில் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீஸ் ஏட்டு வெங்கடேஸ்வரனை சஸ்பெண்டு செய்து போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவிட்டார். இந்த சம்பவம் போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News