உள்ளூர் செய்திகள்

அனுமதியின்றி எருது விடும் விழா நடத்திய 11 பேர் மீது வழக்கு

Published On 2024-01-17 09:25 GMT   |   Update On 2024-01-17 09:25 GMT
  • மாவட்ட நிர்வாக அனுமதியின்றி எருது விடும் விழா நடத்தக்கூடாது என கிராம நிர்வாக அலுவலர் கூறினார்.
  • அதிகாரி வெங்கடேசன் கொடுத்த புகாரின்பேரில் கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி அருகே உள்ளது அம்மனேரி. இங்கு மண்டு மாரியம்மன் கோவில் அருகில் அனுமதியின்றி எருது விடும் விழா நடைபெறுவதாக தகவல் அறிந்து கூலியம் கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேசன் அங்கு சென்றார். அவர் மாவட்ட நிர்வாக அனுமதியின்றி எருது விடும் விழா நடத்தக்கூடாது என கூறினார்.

அந்த நேரம் அங்கிருந்தவர்கள் எருது விடும் விழாவை நிறுத்தாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரி வெங்கடேசன் கொடுத்த புகாரின்பேரில் கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் அதே ஊரை சேர்ந்த முனிராஜ் (39), உள்பட மொத்தம் 11 பேர் மீது வழக்குப்பபிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News