உள்ளூர் செய்திகள்

பிறந்த நாளுக்கு அழைத்து சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர்: போக்சோ சட்டத்தில் வழக்கு

Published On 2023-10-20 04:54 GMT   |   Update On 2023-10-20 04:54 GMT
  • சிறுமியின் குடும்பத்தினர் கேரள மாநிலம் எர்ணாகுளத்துக்கு இடம்பெயர்ந்தனர்.
  • புகாரின் பேரில் போலீசார் சிறுமியிடம் கர்ப்பத்துக்கு யார் காரணம் என விசாரணை நடத்தினர்.

கோவை:

கோவை சூலூர் அருகே உள்ள அப்பநாயக்கன் பட்டியை சேர்ந்தவர் 18 வயது பெண். இவர் கடந்த 2020-ம் ஆண்டு அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்தார்.

அப்போது சிறுமிக்கு மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த பிரவீன் என்ற அரவிந்த் (23) என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது.

இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும், செல்போனில் பேசியும் காதலை வளர்த்து வந்தனர்.

கடந்த சில தினங்களுக்கு மாதங்களுக்கு முன்பு பிரவீனுக்கு பிறந்த நாள் என்பதால் அவரை நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் சொல்வதற்காக சிறுமி சென்றார்.

அப்போது பிரவீன் சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்தார்.

இதற்கிடையே சிறுமியின் குடும்பத்தினர் கேரள மாநிலம் எர்ணாகுளத்துக்கு இடம்பெயர்ந்தனர். அவர்களுடன் சிறுமியும் சென்றார்.

இந்தநிலையில் சிறுமிக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. அவரை பெற்றோர் அந்த பகுதியில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

அங்கு டாக்டர்கள் சிறுமியை பரிசோதனை செய்த போது அவர் 3 மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். இதனை கேட்டு மாணவியின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவர்கள் இதுகுறித்து எர்ணாகுளம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் போலீசார் சிறுமியிடம் கர்ப்பத்துக்கு யார் காரணம் என விசாரணை நடத்தினர். அப்போது பிரவீன் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவித்தார்.

சம்பவம் நடந்தது கோவை மாவட்டம் சூலூர் என்பதால் எர்ணாகுளம் போலீசார் இந்த வழக்கை கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து சூலூர் போலீசார் விசாரணை நடத்தி 18 வயது சிறுமியை பிறந்த நாளுக்கு அழைத்து கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்த பிரவீன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News