உள்ளூர் செய்திகள்
பல்லாவரம் அருகே டிராக்டர் மோதி கொத்தனார் பலி
அனகாபுத்தூரை சேர்ந்தவர் செல்வமணி(வயது53). கொத்தனார்.
தாம்பரம்:
அனகாபுத்தூரை சேர்ந்தவர் செல்வமணி(வயது53). கொத்தனார். இவர்இன்று காலை தனது வீட்டின் அருகே உள்ள கடையில் டீ குடித்து விட்டு சைக்கிளில் திரும்பி வந்து கொண்டு இருந்தார். காமராஜபுரம் அருகே பம்மல் மெயின் ரோட்டில் வந்த போது, எதிரே வந்த டிராக்டர் திடீரென சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே, செல்வமணி உடல் நசுங்கி பலியானார். டிராக்டர் டிரைவர் கோபாலகிருஷ்ணன் போலீசில் சரண் அடைந்தார்.