உள்ளூர் செய்திகள்

பல்லாவரம், முகப்பேர் கிழக்கு, டைடல் பார்க், போரூர் பகுதிகளில் நாளை மின் தடை

Published On 2023-02-14 07:30 GMT   |   Update On 2023-02-14 07:31 GMT
  • சென்னையில் நாளை மின் பராமரிப்பு பணி காரணமாக மின் வினியோகம் நிறுத்தப்படும்.
  • கலைமகள் நகர் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும்.

சென்னை:

தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னையில் நாளை (புதன்கிழமை) மின் பராமரிப்பு பணி காரணமாக பல்லாவரம் டிரங் ரோடு, பழைய சந்தை ரோடு, காவலர் குடியிருப்பு, மூங்கில் ஏரி பகுதி, உசைன்பாசா தெரு, சித்தலப்பாக்கம் நூத்தன்சேரி, வேங்கைவாசல், பாரதிநகர், காந்திநகர், பழனிநகர்.

கிழக்கு முகப்பேர் பகுதியில் உள்ள பாடி புதுநகர் 1-வது தெரு, 19-வது தெரு வரை, கலைவாணர் காலனி, ஜீவன் பீமா நகர், டி.வி.எஸ். அவென்யூ, திருவள்வள்ளுவர் நகர், மகிழ்ச்சி காலனி, கோல்டன் பிளாட்ஸ், தீயணைப்பு துறை குடியிருப்பு, எம்.ஜி. மெயின் ரோடு, ஒலிம்பிக் காலனி, ஆபீசர் காலனி மற்றும் டைட்டல் பார்க் பகுதியில் உள்ள தரமணி பகுதி, பெரியார் நகர், வேளச்சேரி பகுதி, 100 அடி ரோடு பகுதி, அண்ணாநகர், காந்திநகர், அடையார் பகுதி மற்றும் போரூர் பகுதியில் உள்ள பூந்தமல்லி டிரன்க் ரோடு, சேஷா நகர், கலைமகள் நகர் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News