உள்ளூர் செய்திகள்

படப்பை அருகே என்ஜினீயர் தற்கொலை

Published On 2022-11-23 16:36 IST   |   Update On 2022-11-23 16:36:00 IST
  • அருண்குமார் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசியிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மணிமங்கலம்:

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 29). என்ஜினீயர். நேற்று முன்தினம் அருண்குமார் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசியிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மணிமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி அருண்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அருண்குமார் என்ஜினீயரிங் படித்தும் வேலை இல்லாமல் இருந்ததாகவும் இதனால் விரக்தியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இது குறித்து மணிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News