உள்ளூர் செய்திகள்

தி.மு.க எம்.எல்.ஏ வீட்டில் துக்கம் விசாரித்த ஓ.பன்னீர்செல்வம்

Published On 2023-01-03 05:03 GMT   |   Update On 2023-01-03 05:03 GMT
  • கம்பம் தி.மு.க எம்.எல்.ஏ. ராமகிருஷ்ணனின் சகோதரர் மனைவி கீதா கடந்த 28-ந்தேதி உடல்நலக்குறைவால் காலமானார்.
  • கம்பம் ராமகிருஷ்ணன் வீட்டிற்கு சென்ற ஓ.பன்னீர்செல்வம் அவரிடமும், அவரது சகோதரர் முருகேசன் குடும்பத்தாரிடமும் துக்கம் விசாரித்து ஆறுதல் கூறினார்.

கம்பம்:

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமைக்கு கடும் போட்டி நிலவி வரும் நிலையில் ஓ.பன்னீர்செல்வம் பெரியகுளத்தில் உள்ள தனது பண்ணை வீட்டில் ஆதரவாளர்களை சந்தித்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார். அவரை தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் இருந்து நிர்வாகிகள் சந்தித்து வருகின்றனர்.

மேலும் ஓ.பன்னீர்செல்வம் தேனி மாவட்டத்திலும் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் உற்சாகம் அளித்து வருகிறார். தொண்டர்களின் திருமண நிகழ்ச்சிகள், கோவில் திருவிழாக்கள் போன்றவற்றில் கலந்து கொள்வதுடன் தனது போடி தொகுதிக்குட்பட்ட மக்களையும் சந்தித்து குறைகளை கேட்டு வருகிறார்.

இந்நிலையில் கம்பத்தில் தி.மு.க எம்.எல்.ஏ. ராமகிருஷ்ணன் இல்லத்திற்கு சென்ற ஓ.பன்னீர்செல்வம், அவரது உறவினர் இறந்ததற்கு துக்கம் விசாரித்தார். கம்பம் தி.மு.க எம்.எல்.ஏ. ராமகிருஷ்ணனின் சகோதரர் மனைவி கீதா கடந்த 28-ந்தேதி உடல்நலக்குறைவால் காலமானார்.

இதனைதொடர்ந்து கம்பம் ராமகிருஷ்ணன் வீட்டிற்கு சென்ற ஓ.பன்னீர்செல்வம் அவரிடமும், அவரது சகோதரர் முருகேசன் குடும்பத்தாரிடமும் துக்கம் விசாரித்து ஆறுதல் கூறினார். அப்போது தி.மு.க, அ.தி.மு.க நிர்வாகிகள் பலர் இருந்தனர்.

இது தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News