உள்ளூர் செய்திகள்

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளுக்கு என்.ஆர்.தனபாலன் வாழ்த்து

Published On 2023-04-05 11:18 GMT   |   Update On 2023-04-05 11:18 GMT
  • நாளை தொடங்க இருக்கும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ-மாணவிகள் அனைவரும் 100 சதவீதம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.
  • தன் மீதுள்ள திடமான நம்பிக்கையாலும், அச்சம் தவிர்த்து, வெற்றி பெற வேண்டும் என்கிற முனைப்போடும், எதிர்கால சிந்தனையோடும், நாமும் சமுதாயத்தில் உயர்ந்த இடத்திற்கு வரவேண்டும்.

சென்னை:

பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-

நாளை தொடங்க இருக்கும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ-மாணவிகள் அனைவரும் 100 சதவீதம் வெற்றி பெற வாழ்த்துகிறேன். தன் மீதுள்ள திடமான நம்பிக்கையாலும், அச்சம் தவிர்த்து, வெற்றி பெற வேண்டும் என்கிற முனைப்போடும், எதிர்கால சிந்தனையோடும், நாமும் சமுதாயத்தில் உயர்ந்த இடத்திற்கு வரவேண்டும் என்கிற லட்சியத்தோடும், உயர்ந்த கனவுகளோடும், தேர்வு மையத்திற்கு தவறாமல் வருகை தந்து தேர்வுகளை எழுதி வெற்றி பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News