உள்ளூர் செய்திகள்

நாட்டறம்பள்ளி அருகே நீட் தேர்வு முடிவுக்கு பயந்து மாணவன் தற்கொலை

Published On 2023-05-17 04:49 GMT   |   Update On 2023-05-17 05:34 GMT
  • கடந்த 7-ந்தேதி நீட் தேர்வை பரமேஸ்வரன் எழுதினார். தேர்வை சரிவர எழுதவில்லை என்று தெரிகிறது.
  • பரமேஸ்வரன் உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

ஜோலார்பேட்டை:

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி ஜங்களாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் பரமேஸ்வரன் (வயது 17). இவர் பிளஸ்-2 வில் தேர்ச்சி பெற்றார்.

கடந்த 7-ந்தேதி நீட் தேர்வை பரமேஸ்வரன் எழுதினார். தேர்வை சரிவர எழுதவில்லை என்று தெரிகிறது. இதனால் பரமேஸ்வரன் மனமுடைந்து காணப்பட்டார். இந்த நிலையில் நேற்று இரவு திடீரென வீட்டின் அறையில் தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் கிடந்தார்.

இதனைக் கண்ட பெற்றோர் அவரை மீட்டு நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் பரமேஸ்வரன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து செந்தில்குமார் நாட்டறம்பள்ளி போலீசில் புகார் அளித்தார்.

பரமேஸ்வரன் உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News