உள்ளூர் செய்திகள்

நந்திவரம் கூடுவாஞ்சேரியில் அரசு ஆஸ்பத்திரியில் மத்திய சுகாதார செயலாளர் ஆய்வு

Published On 2023-11-24 06:23 GMT   |   Update On 2023-11-24 06:23 GMT
  • மத்திய சுகாதார செயலாளர் கதன்ஷ் பந்த் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
  • செங்கல்பட்டு மாவட்ட துணை இயக்குநர் பரணிதரன் கலந்து கொண்டனர்.

நந்திவரம் கூடுவாஞ்சேரியில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதார பெருவிழா மற்றும் மருத்துவ முகாம் நடைபெற்றது. முதன்மை செயலாளர் ககன்தீப் சிங் பேடி முன்னிலை வகித்தார். மத்திய சுகாதார செயலாளர் கதன்ஷ் பந்த் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது பிரதம மந்திரியின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மருத்துவ காப்பீடு அட்டை, முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்ட பயனாளிகளுக்கு மகப்பேறு ஊட்டச்சத்து பெட்டகம், கண்ணொளி காப்போம் திட்ட பயனாளிகளுக்கு கண் கண்ணாடிகள், ரத்த தானம் முகாமில் ரத்த தானம் வழங்கிய நபர்களுக்கு சான்றிதழ்கள் ஆகியவற்றை மத்திய சுகாதார செயலாளர் சுதன்ஷ் பந்த் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் கூடுதல் இயக்குநர் சேகர், செங்கல்பட்டு மாவட்ட துணை இயக்குநர் பரணிதரன் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News