உள்ளூர் செய்திகள்

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை உயர்வு

Published On 2023-06-18 07:00 GMT   |   Update On 2023-06-18 07:00 GMT
  • முட்டைகள் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
  • நாமக்கல்லில் முட்டை உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

நாமக்கல்:

நாமக்கல் மண்டலத்தில் 8 கோடிக்கு அதிகமான முட்டை கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இதன் மூலம் தினமும் 6 கோடிக்கு அதிகமான முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த முட்டைகள் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதற்கான விலை நாமக்கல்லில் தினசரி நிர்ணயம் செய்யப்படுகிறது. நேற்று நாமக்கல்லில் முட்டை உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

இதில் முட்டையின் தேவை மற்றும் உற்பத்தி குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. பின்னர் முட்டையின் விலையை மேலும் 5 காசுகள் உயர்த்த முடிவு செய்யப்பட்டது, அதன்படி 530 காசுகளாக இருந்த முட்டை விலை 535 காசுகளாக உயர்ந்தது.

பல்லடத்தில் நடந்த கறிக்கோழி உற்பத்தியாளர்கள் வியாபாரிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கறிக்கோழி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் பண்ணை கொள்முதல் விலை ரூ.143-யாக நீடிக்கும் என அறிவிக்கப்பட்டது.

இதேபோல முட்டை கோழி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ரூ.95-யாக நிர்ணயம் செய்யப்பட்டது.

Tags:    

Similar News