உள்ளூர் செய்திகள்

கோவில்பட்டி அருகே விபத்து: போலீஸ்காரர்-4 வயது மகன் பலி

Published On 2022-06-27 09:02 GMT   |   Update On 2022-06-27 09:02 GMT
  • திட்டங்குளம் தொழிற்பேட்டை முன்பு சாலையை கடக்க முயன்ற போது, எட்டயபுரத்தில் இருந்து கோவில்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்த கார் மார்சல்ராஜா சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
  • இதில் மார்சல்ராஜா உள்ளிட்ட 4 பேரும் தூக்கிவீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். அவர்களை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

கோவில்பட்டி:

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வெங்கடேஷ்வராபுரத்தை சேர்ந்தவர் மார்சல் ராஜா (வயது38). இவர் காடல்குடி போலீஸ் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி தேவிகா (30). இவர்களுக்கு ரஸ்வந்த் (6), ரிஷாந்த் (4) என்ற 2 மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று மார்சல்ராஜா, தனது மனைவி மற்றும் 2 மகன்களுடன் பொருட்கள் வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளில் கோவில்பட்டி திட்டங்குளம் சென்றார். பின்னர் மீண்டும் அவர்கள் வீடு திரும்பினர்.

திட்டங்குளம் தொழிற்பேட்டை முன்பு சாலையை கடக்க முயன்ற போது, எட்டயபுரத்தில் இருந்து கோவில்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்த கார் மார்சல்ராஜா சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் மார்சல்ராஜா உள்ளிட்ட 4 பேரும் தூக்கிவீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். அவர்களை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் சிறுவன் ரிஷாந்த் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்றுகாலை சிகிச்சை பலனளிக்காமல் மார்சல்ராஜாவும் உயிரிழந்தார்.

இது தொடர்பாக கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை ஓட்டிவந்த விளாத்திகுளம் பூமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சிவராமச்சந்திரனை (24) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News