உள்ளூர் செய்திகள்

மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் ஆயிரக்கணக்கில் அணி திரள்வோம்- அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிக்கை

Published On 2023-02-24 14:43 IST   |   Update On 2023-02-24 14:43:00 IST
  • சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பிறந்த நாளையொட்டி கட்சி தொண்டர்களை நேரில் சந்திக்க உள்ளார்.
  • மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற அனைவரும் வாருங்கள் என அமைச்சர் தா.மோ.அன்பரசன் அழைக்கிறார்.

சென்னை:

காஞ்சி வடக்கு மாவட்டக் கழக செயலாளர் அமைச்சர் தா.மோ.அன்பரசன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் மார்ச் 1-ந் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்த நாளையொட்டி அனைத்துக் கட்சி தலைவர்கள், முதல்வர்கள் பங்கேற்கும் மாபெரும் பொதுக்கூட்டம். பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையில் நடைபெற உள்ளது.

பொதுக்கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே, காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் பங்கேற்று வாழ்த்துரை வழங்க உள்ளனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் சிறப்புரையாற்றுகிறார். இந்த பொதுக்கூட்டத்தில் காஞ்சி வடக்கு மாவட்டத்தில் உள்ள மாநகர, பகுதி, ஒன்றிய நகர கிளை கழகங்களில் இருந்து ஆயிரக்கணக்கான கழகத்தினரும் இளைஞர் அணியினரும் மகளிர் அணியினரும் அலைகடலென அணிதிரண்டு பங்கேற்று பொதுக்கூட்டத்தை வெற்றி மாநாடாக ஆக்கிட வேண்டும்.

மார்ச் 1 அன்று காலை 8 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பிறந்த நாளையொட்டி கட்சி தொண்டர்களையும் நேரில் சந்திக்க உள்ளார். அவரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற அனைவரும் வாருங்கள் என அழைக்கிறேன்.

இவ்வாறு த.மோ.அன்பரசன் கூறியுள்ளார்.

Tags:    

Similar News