உள்ளூர் செய்திகள்

எலி மருந்தை தின்ற 85 வயது மூதாட்டி பலி

Published On 2023-06-16 09:26 GMT   |   Update On 2023-06-16 09:26 GMT
  • சிகிச்சை பலனின்றி எல்லம்மாள் பரிதாபமாக இறந்தார்.
  • மூதாட்டி பலி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மீஞ்சூர் அண்ணா தெரு, காலனி பகுதியை சேர்ந்தவர் எல்லம்மாள் (வயது85). இவர் வீட்டில் வைத்திருந்த எலி மருந்தை தெரியாமல் சாப்பிட்டுவிட்டார்.

இதில் மயங்கிய அவரை மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி எல்லம்மாள் பரிதாபமாக இறந்தார்.

Tags:    

Similar News