உள்ளூர் செய்திகள்

கவர்னர் ஆர்.என்.ரவி அரசியல் செய்து வருகிறார்- அமைச்சர் பொன்முடி

Published On 2023-07-06 06:23 GMT   |   Update On 2023-07-06 06:23 GMT
  • அதிக அளவில் ஆதிக்கம் செலுத்துகிறார் கவர்னர் ஆர். என். ரவி.
  • உயர்கல்வித்துறையில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொண்டு கவர்னர் பேச வேண்டும்.

சென்னை:

தலைமை செயலகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நாகை மீன்வள பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா கவர்னர் மாளிகையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கவர்னரின் இந்த அறிவிப்பை எப்படி ஏற்க முடியும். பல்கலை. சிண்டிகேட் கூட்டங்கள் தலைமைச் செயலகத்தில் நடப்பதாக குற்றம் சாட்டும் கவர்னர், அதே கூட்டத்தை ராஜ்பவனில் ஏன் நடத்தினார்.

தவறுகளை முறையாக சுட்டிக்காட்ட வேண்டும். ஆனால் அவருக்கு வேண்டப்பட்டவர்களை கொண்டு வருவதற்காக குற்றச்சாட்டுகளை தெரிவிக்கக் கூடாது.

செயலாளரை கூட சந்திக்க முடியவில்லை என கவர்னர் தெரிவிக்கிறார். ஆனால், நான் இல்லாமலேயே பல கூட்டங்களை அவர் நடத்தி இருக்கிறார். வேண்டப்பட்டவர்களை கொண்டு வரவேண்டும் என்பதற்காக இதுபோன்று குற்றச்சாட்டை சுமத்துகிறார்.

அதிக அளவில் ஆதிக்கம் செலுத்துகிறார் கவர்னர் ஆர். என். ரவி. அரசியல் செய்யும் சிந்தனையுடன் அவர் செயல்பட்டு வருகிறார்.

உயர்கல்வித்துறையில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொண்டு கவர்னர் பேச வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News