உள்ளூர் செய்திகள்

கலங்கி நின்ற அமைச்சர் துரைமுருகன்

Published On 2023-09-09 09:06 GMT   |   Update On 2023-09-09 09:06 GMT
  • மாநகராட்சி அதிகாரிகள் எந்த வேலையும் பார்க்கவில்லை.
  • பொதுமக்கள் குறைகளை அமைச்சரிடம் சென்று முறையிடுவார்கள்.

துன்பப்படுறவங்க எல்லாம் அந்த கவலையை தெய்வத்துகிட்ட முறையிடுவாங்க. ஆனா தெய்வமே கலங்கி நின்னா என்பதைப் போல் அமைச்சர் துரைமுருகன் மக்கள் மத்தியில் நின்று பேசியது ஆச்சரியமாக இருந்தது.

காட்பாடியில் நடந்த நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதன் பிறகு அவர் பேசும்போது, வேலூர் மாநகராட்சி பகுதியில் சாலைகள் எல்லாம் குண்டும் குழியுமாக கிடக்கிறது. மாநகராட்சி அதிகாரிகள் எந்த வேலையும் பார்க்கவில்லை. வேலை பார்க்காத அதிகாரிகளை பட்டையை உரிக்கணும் என்றார்.

பொதுமக்கள் குறைகளை அமைச்சரிடம் சென்று முறையிடுவார்கள். ஆனால் அமைச்சரே குறைகளை பார்த்து வேதனைப்படும்போது யாரிடம் சென்று முறையிடுவார்கள்.

Tags:    

Similar News