உள்ளூர் செய்திகள்
மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஊராட்சி தலைவர்கள் கூட்டம்
மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகள் குறித்து ஒன்றியத்தில் உள்ள ஊராட்சித் தலைவர்கள்.
பொன்னேரி:
மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகள் குறித்து ஒன்றியத்தில் உள்ள ஊராட்சித் தலைவர்கள், துணைத் தலைவர்கள் ஊராட்சி செயலாளர்கள் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஊராட்சி உதவி இயக்குனர் ரூபேஷ்குமார் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவி, ராமகிருஷ்ணன் பங்கேற்றனர். கூட்டத்தில் ஊராட்சித் தலைவர்கள் கோளூர் குமார், மெதுர் சீனிவாசன், பவானி கங்கை அமரன், ஞானவேல், சம்பத், வனிதாஸ்ரீ ராஜேஷ், மங்கை உமாபதி, சசிகுமார், பாக்கியலட்சுமி, இலக்கியா கண்ணதாசன், மாலதி சரவணன் மஞ்சுளா பஞ்சாட்சரம், துணைத் தலைவர் எம்.டி.ஜி. கதிர்வேல், ஊராட்சி செயலாளர் முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.