உள்ளூர் செய்திகள்

நெல்லையில் விடுதி அறையில் விஷம் குடித்து மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை

Published On 2023-04-16 07:53 GMT   |   Update On 2023-04-16 07:53 GMT
  • தாய் இறந்த துக்கத்தில் யோகீஸ்வரி மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகவும், அதற்காக நெல்லையில் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றதாகவும் கூறப்படுகிறது.
  • ஐகிரவுண்டு போலீசார் வழக்குப் பதிவு செய்து மருத்துவக் கல்லூரி மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை:

கடலூர் மாவட்டம் வடலூர் காட்டு கொள்ளை பகுதி ஓ.பி.ஆர். நகரை சேர்ந்தவர் சங்கர்.

இவர் கடலூரில் தீயணைப்பு துறையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் யோகீஸ்வரி (வயது 23). இவர் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எம்.பி.பி.எஸ். 4-ம் ஆண்டு படித்து வந்தார்.

கொரோனா காலகட்டத்தின் போது இவரது தாயார் இறந்து விட்டார். இதனால் தாய் இறந்த துக்கத்தில் யோகீஸ்வரி மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகவும், அதற்காக நெல்லையில் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று அவர் தங்கியிருந்த விடுதி அறையில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதனை கண்ட சக மாணவிகள் அவரை மீட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார்.

இது தொடர்பாக ஐகிரவுண்டு போலீசார் வழக்குப் பதிவு செய்து மருத்துவக் கல்லூரி மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News