உள்ளூர் செய்திகள்
மாமல்லபுரம் அருகே கார் மோதி சிற்பி பலி
- மாமல்லபுரம் அடுத்த பையணூர் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித்குமார்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் அடுத்த பையணூர்பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித்குமார்(வயது40), சிற்பியான இவர் மாமல்லபுரத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொன்டிருந்தார். கூத்தவாக்கம் ஓ.எம்.ஆர் சாலையில் சென்றபோது அடையாளம் தெரியாத கார் ஒன்று திடீரென மோட்டார் சைக்களில் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில்படுகாயம் அடைந்த ரஞ்சித்குமார் சம்பவ இடத்திலேயே பலியானார்.