உள்ளூர் செய்திகள்

மாதவரம், மணலி, திருவொற்றியூர் பகுதிகளுக்கு புழல் ஏரியில் இருந்து குடிநீர் வினியோகம்

Published On 2022-09-11 09:37 GMT   |   Update On 2022-09-11 09:37 GMT
  • பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
  • திருவொற்றியூர், எர்ணாவூர், கத்திவாக்கம், பட்டேல் நகர், வியாசர்பாடி ஆகிய பகுதிகளுக்கு புழல் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து குடிநீர் வழங்கப்படும்.

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மீஞ்சூரில் அமைந்துள்ள நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் வருகிற 13-ந் தேதி காலை 6 மணி முதல் 15-ந் தேதி காலை 10 மணி வரை மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே, மாற்று ஏற்பாடாக மாதவரம், மணலி, திருவொற்றியூர், எர்ணாவூர், கத்திவாக்கம், பட்டேல் நகர், வியாசர்பாடி ஆகிய பகுதிகளுக்கு புழல் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து குடிநீர் வழங்கப்படும்.

மேலும், பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், அவசரத் தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக் கொள்ள கீழ்காணும் அலுவலர்களை தொடர்பு கொள்ளவும்.

திருவொற்றியூர், எர்ணாவூர், கத்திவாக்கம் பகுதி மக்கள் 8144930901 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

மணலி பகுதி மக்கள் 8144930902 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

மாதவரம் பகுதி மக்கள் 8144930903 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

பட்டேல் நகர், வியாசர்பாடி பகுதி மக்கள் 8144930904 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

சிந்தாதிரிப்பேட்டை தலைமை அலுவலக எண்களான 044-2845 1300, 044-4567 4567-லும் புகார் செய்யலாம்.

Similar News