உள்ளூர் செய்திகள்

மாமல்லபுரம் அருகே பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதல்- கல்லூரி மாணவர் பலி

Published On 2022-08-07 14:23 IST   |   Update On 2022-08-07 17:59:00 IST
  • ஆந்திரா மாநிலத்தை சேர்ந்தவர்கள் கவுதம், ஜெயந்த்.
  • மாமல்லபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆந்திரா மாநிலத்தை சேர்ந்தவர்கள் கவுதம் (வயது20), ஜெயந்த்(19). இருவரும் கேளம்பாக்கம் அடுத்த படூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.டெக் 2-ம் ஆண்டு படித்து வந்தனர். இவர்கள் பாண்டிச்சேரியில் உள்ள நண்பர் ஒருவரை பார்த்து விட்டு மோட்டார் சைக்கிளில் படூர் நோக்கி வந்து கொண்டு இருந்தனர். மாமல்லபுரம் அடுத்த பட்டிப்புலம் கிழக்கு கடற்கரை சாலையில் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் முன்னால் சென்ற மாநகர பஸ் மீது திடீரென மோதியது.

இதில் பலத்த காயம்அடைந்த ஜெயந்த் சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயம் அடைந்த கவுதம் கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து மாமல்லபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News