உள்ளூர் செய்திகள்

காட்டாங்கொளத்தூர் அருகே பஸ் மீது லாரி மோதி விபத்து- ஓட்டுனர் உயிர் தப்பினார்

Published On 2023-08-26 07:04 GMT   |   Update On 2023-08-26 07:04 GMT
  • ஓட்டுனர் பால்பாண்டியின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தனியார் நிறுவனத்தின் பஸ் பின்பக்கத்தில் பயங்கரமாக மோதியது.
  • விபத்து குறித்து கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காட்டாங்கொளத்தூர்:

தூத்துக்குடியில் இருந்து சென்னை நோக்கி உப்பு மூட்டைகளை ஏற்றிக் கொண்டு சென்ற போது காட்டாங்கொளத்தூர் அருகே வந்த போது ஓட்டுனர் பால்பாண்டியின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தனியார் நிறுவனத்தின் பஸ் பின்பக்கத்தில் பயங்கரமாக மோதியது.

இதில் லாரி ஓட்டுனர் பால்பாண்டிக்கு படுகாயங்கள் ஏற்பட்டது. சம்பவம் குறித்து தகவல் அறிந்த மறைமலைநகர் தீயணைப்பு துறை ஆய்வாளர் கார்த்திகேயன் தலைமையில் வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணிநேரம் போராடி ஓட்டுனர் பால்பண்டியை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News