தாம்பரம் அருகே லாரி மோதி ஆஸ்பத்திரி ஊழியர் பலி
- சென்னை, தியாகராய நகர் பகுதியை சேர்ந்தவர் சாமுவேல் (வயது 50).
- தாம்பரம் அடுத்த முடிச்சூர் பகுதியில் சொந்தமாக வீடு உள்ளது.
தாம்பரம்:
சென்னை, தியாகராய நகர் பகுதியை சேர்ந்தவர் சாமுவேல் (வயது 50). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
இவருக்கு தாம்பரம் அடுத்த முடிச்சூர் பகுதியில் சொந்தமாக வீடு உள்ளது. அதனை வாடகைக்கு விட்டுள்ளார்.
இந்த நிலையில் இன்று காலை முடிச்சூரில் உள்ள வீட்டை பார்த்து விட்டு சாமுவேல் மோட்டார் சைக்களில் தாம்பரம் நோக்கி சென்று கொண்டு இருந்தார்.
அப்போது பின்னால் வந்த லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் லாரியின் சக்கரத்தில் சிக்கிய சாமுவேல் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் சிட்லபாக்கம் போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து பலியான சாமுவேலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.