உள்ளூர் செய்திகள்

குடும்ப தகராறில் மனைவியின் கையை துண்டித்த தொழிலாளி

Published On 2022-08-10 11:48 IST   |   Update On 2022-08-10 11:48:00 IST
  • சக்திவேல் வீட்டிற்கு வந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.
  • சிவகங்கை போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்திவேலை கைது செய்தனர்.

சிவகங்கை:

சிவகங்கை கல்லூரி சாலையில் வசித்து வருபவர் சக்திவேல். கூலித்தொழிலாளி. இவரது மனைவி நம்பீஸ்வரி. கணவன்-மனைவிக்கு இடையே குடும்பப் பிரச்சினை காரணமாக தகராறு இருந்தது.

நேற்று இரவு சக்திவேல் வீட்டிற்கு வந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சக்திவேல் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து நம்பீஸ்வரியை வெட்டினார். இதில் அவரது கை துண்டானது.

உடனடியாக சிவகங்கை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நம்பீஸ்வரி முதலுதவி சிகிச்சைக்கு பிறகு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து சிவகங்கை போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்திவேலை கைது செய்தனர்.

Similar News