உள்ளூர் செய்திகள்

கொரட்டூரில் வாலிபரை கொலை செய்ய திட்டம்- கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் பயங்கர ஆயுதங்களுடன் கைது

Published On 2022-07-05 08:36 GMT   |   Update On 2022-07-05 08:36 GMT
  • வீட்டை சுற்றி வளைத்து அதிரடியாக புகுந்தனர்.
  • சரியான நேரத்தில் அவர்கள் கைது செய்யப்பட்டதால் கொலை திட்டம் தடுக்கப்பட்டு உள்ளது.

அம்பத்தூர்:

கொரட்டூர், கங்கை அம்மன் கோவில் தெருவில் உள்ள ஒரு வீட்டில் பயங்கர ஆயுதங்களுடன் மர்மகும்பல் பதுங்கி இருப்பதாக இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்திக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்துபோலீசார் அந்த வீட்டை சுற்றி வளைத்து அதிரடியாக புகுந்தனர். அப்போது போலீசாரை கண்டதும் வீட்டில் இருந்த 3 வாலிபர்கள் தப்பி ஓடிவிட்டனர். அங்கிருந்த மேலும் 3 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர்.

அவர்கள் கொரட்டூர் பகுதியை சேர்ந்த ஆகாஷ், கல்லூரி மாணவரான அஜய் மற்றும் பட்டரைவாக்கம் பகுதியை சேர்ந்த நிஷாந்த் என்பது தெரிய வந்தது.

அவர்கள் சிறையில் இருக்கும் ஒரு ரவுடியின் திட்டப்படி அதேபகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரை தீர்த்து கட்ட திட்டமிட்டு பதுங்கி இருந்தது தெரிந்தது. சரியான நேரத்தில் அவர்கள் கைது செய்யப்பட்டதால் கொலை திட்டம் தடுக்கப்பட்டு உள்ளது.

கைதானவர்களிடம் இருந்து அரிவாள், பட்டாக் கத்தி மற்றும் அதனை கூர்மைப்படுத்த பயன் படுத்தும் எந்திரம், இரும்பு கம்பிகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தப்பி ஓடிய 3 பேர் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News