உள்ளூர் செய்திகள்

கொளப்பாக்கத்தில் கஞ்சா விற்க முயன்ற வாலிபர் கைது

Published On 2023-01-10 16:30 IST   |   Update On 2023-01-10 16:39:00 IST
  • கொளப்பாக்கம் மெயின் ரோடு பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக ஒட்டேரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெபஸ்டினை கைது செய்து அவரிடம் இருந்து 500 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.

வண்டலூர்:

செங்கல்பட்டு மாவட்டம் கொளப்பாக்கம் மெயின் ரோடு பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக ஓட்டேரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து போலீசார் விரைந்து சென்று சம்பவ இடத்தில் பார்த்தபோது, அங்கு சந்தேகப்படும்படி சுற்றிக் கொண்டிருந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரித்த போது, அவர் முன்னுக்கு பின் முரணான தகவல்களை அளித்தார். போலீசார் தொடர்ந்து விசாரித்த போது கொளப்பாக்கம் அண்ணா நகர் பகுதியை சேர்ந்த ஜெபஸ்டின் (வயது 23), என்பது தெரியவந்தது.

இது குறித்து ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெபஸ்டினை கைது செய்து அவரிடம் இருந்து 500 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News