உள்ளூர் செய்திகள்

கே.கே.நகரில் மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் திருடிய வாலிபர்களுக்கு தர்ம அடி

Published On 2023-07-23 09:43 GMT   |   Update On 2023-07-23 09:43 GMT
  • மோட்டார் சைக்கிள்களில் இருந்து பெட்ரோலை திருடி தப்பிசெல்ல முயன்றனர்.
  • நண்பர்களான இருவரும் சேர்ந்து தொடர்ந்து நள்ளிரவில் பெட்ரோல் திருட்டில் ஈடுபட்டு வருவது தெரியவந்தது.

சென்னை:

கே.கே நகர் சிவலிங்கபுரம் பகுதியில் வீடுகள் முன்பு இரவு நேரங்களில் ஏராளமன மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தப்படுவது வழக்கம்.

இந்த நிலையில் நள்ளிரவு 2மணி அளவில் பெரிய கேனுடன் வந்த 2 வாலிபர்கள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களில் இருந்து பெட்ரோலை திருடி தப்பிசெல்ல முயன்றனர். சத்தம் கேட்டு திரண்ட அப்பகுதி மக்கள் 2 வாலிபர்களையும் மடக்கி பிடித்த தர்ம அடி கொடுத்தனர்.

பின்னர் அவர்களை கே.கே நகர் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த முத்துகிருஷ்ணன், விக்டர் என்பது தெரிந்தது. நண்பர்களான இருவரும் சேர்ந்து தொடர்ந்து நள்ளிரவில் பெட்ரோல் திருட்டில் ஈடுபட்டு வருவது தெரியவந்தது.

Tags:    

Similar News