உள்ளூர் செய்திகள்

கடையின் மேற்கூரையில் துளையிட்டு ரூ.20 ஆயிரம் திருட்டு

Published On 2023-06-25 17:42 IST   |   Update On 2023-06-25 17:42:00 IST
  • மருந்து கடையின் மேற்கூரையில் துளையிட்டு உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் கடையில் இருந்த ரூ.20 ஆயிரத்தை திருடி விட்டு சென்றனர்.
  • கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

மணிமங்கலம்:

காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் பகுதியை சேரந்தவர் நாகராஜ் (வயது 57), படப்பை அடுத்த கரசங்கால் பகுதியில் மருந்து கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் பூட்டியிருந்த மருந்து கடையின் மேற்கூரையில் துளையிட்டு உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் கடையில் இருந்த ரூ.20 ஆயிரத்தை திருடி விட்டு சென்றனர். இதுகுறித்து மணிமங்கலம் போலீசருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது.

புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அங்கு உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News