உள்ளூர் செய்திகள்
வேலை வாய்ப்பு முகாமை தொடங்கி வைத்தார் விஜய் வசந்த்
- கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வேலையில்லா இளைஞர்களுக்கு வேலை முகாம்.
- வேலை வாய்ப்பு முகாமில் கல்லூரி முதல்வர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வேலையில்லா இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்க வசந்த் அன் கோ சார்பில் வேலை வாய்ப்பு முகாமை பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தொடங்கி வைத்தார்.
நூற்றுக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்கும் இந்த முகாமில் பொன் ஜெஸ்லி கல்லூரி தாளாளர் மற்றும் கல்லூரி முதல்வர் ஆகியோர் கலந்து கொண்டனர்.