உள்ளூர் செய்திகள்

காஞ்சிபுரம் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் ரூ.14 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி

Published On 2022-10-18 07:16 GMT   |   Update On 2022-10-18 07:16 GMT
  • காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
  • துணை கலெக்டர் சுமதி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலா் சிவருத்ரய்யா தலைமைதாங்கினார். மாவட்ட கலெக்டர் ஆர்த்தி பொதுமக்களிடம் இருந்து 420 மனுக்களை பெற்று அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அரசு துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

மொத்தம் ரூ.13 லட்சத்து 98 ஆயிரத்து 700 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளரான புண்ணியகோடி, துணை கலெக்டர் சுமதி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News