உள்ளூர் செய்திகள்

கிழக்கு முகப்பேரில் என்ஜினீயர் வீட்டில் நகை-பணம் கொள்ளை

Published On 2022-09-05 16:24 IST   |   Update On 2022-09-05 16:24:00 IST
  • பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலாஜி ராம்குமார்.
  • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அம்பத்தூர்:

முகப்பேர் கிழக்கு, கோல்டன் ஜார்ஜ் நகர் , பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலாஜி ராம்குமார். என்ஜினீயரான இவர் போரூரில் உள்ள ஐ.டி. கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவர் விநாயகர் சதுர்த்தியையொட்டி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சொந்த ஊரான தேனிக்கு சென்றார். பின்னர் திரும்பி வந்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 20 பவுன் நகை, 5 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.20ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரியவந்தது. இது குறித்து ஜெ.ஜெ நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News