உள்ளூர் செய்திகள்

குலசேகரப்பட்டினத்தில் முதியவர் கழுத்தை நெரித்துக்கொலை

Published On 2023-05-20 04:45 GMT   |   Update On 2023-05-20 04:45 GMT
  • சின்னத்துரை, நடராஜனை கழுத்தை நெரித்துக் கொலை செய்தார். அப்போது அந்த வழியாக ரோந்து வந்த குலசேகரப்பட்டினம் போலீசார் அதனை பார்த்தனர்.
  • சின்னத்துரையை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

உடன்குடி:

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்தவர் நடராஜன் (வயது70). இவர் தனது மனைவி ஊரான குலசேகரப்பட்டினம் சவேரியார்கோவில் தெருவில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.இவருக்கு மனைவி மற்றும் 1 மகன், 2 மகள்கள் உள்ளனர்.

அவர்களுக்கு திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். இதனால் நடராஜனும், அவரது மனைவியும் மட்டும் குலசேகரன்பட்டினத்தில் வசித்து வந்தனர். அவர் வேலைக்கு செல்லாமல் மதுகுடித்துவிட்டு சுற்றித்திரிந்து வந்தார்.

இந்நிலையில் நேற்று இரவு நடராஜனும், அவரது மனைவியின் உறவினரான முத்தையா என்பவரது மகன் சின்னத்துரையும் (27) குலசேகரப்பட்டினம் புறவழிச்சாலையில் மது குடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த சின்னத்துரை, நடராஜனை கழுத்தை நெரித்துக் கொலை செய்தார். அப்போது அந்த வழியாக ரோந்து வந்த குலசேகரப்பட்டினம் போலீசார் அதனை பார்த்தனர்.

உடனே அவர்கள் நடராஜன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சின்னத்துரையை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News