உள்ளூர் செய்திகள்
ஈஞ்சம்பாக்கம் குளக்கரையில் வாலிபர் மர்ம மரணம்
- போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னை:
சென்னை கிழக்கு கடற்கரை ஈஞ்சம்பாக்கம் அனுமன் காலனி வக்காரி குளக்கரையில் இன்று காலை வாலிபர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. நீலாங்கரை போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
உயிரிழந்த வாலிபருக்கு 35 வயது இருக்கும். அவர் யார்? எப்படி இறந்தார்? என்பது தெரியவில்லை. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.