உள்ளூர் செய்திகள்

10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை: கட்டிட தொழிலாளி கைது

Published On 2023-01-19 12:10 IST   |   Update On 2023-01-19 12:10:00 IST
  • நாளுக்குநாள் நல்ல மருதுவின் தொல்லை அதிகரிக்க தனக்கு நேர்ந்த கொடுமையை மாணவி தனது தாயிடம் தெரிவித்துள்ளார்.
  • அதிர்ச்சியடைந்த தாய் அருப்புக்கோட்டை மகளிர் போலீசில் புகார் செய்தார்.

அருப்புக்கோட்டை:

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை பகுதியை சேர்ந்த 16 வயதுடைய மாணவி அதே பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். மாணவியின் உறவினர் நல்லமருது (வயது 37) என்பவர் வீட்டின் அருகில் வசித்து வருகிறார். கட்டிட தொழிலாளியான இவர் கடந்த சில வாரங்களாக வேலைக்கு செல்லவில்லை.

இந்த நிலையில் மாணவி தனியாக இருக்கும்போது நல்லமருது வீட்டுக்கு சென்று பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என மிரட்டி உள்ளார்.

நாளுக்குநாள் நல்ல மருதுவின் தொல்லை அதிகரிக்க தனக்கு நேர்ந்த கொடுமையை மாணவி தனது தாயிடம் தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் இதுகுறித்து அருப்புக்கோட்டை மகளிர் போலீசில் புகார் செய்தார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் நல்லமருது பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் நல்லமருதுவை கைது செய்தனர்.

Tags:    

Similar News