உள்ளூர் செய்திகள்

இரும்பு கம்பியால் தொழிலாளியை தாக்கிய நண்பர்கள்- 4 பேர் கைது

Published On 2023-02-21 08:30 GMT   |   Update On 2023-02-21 08:30 GMT
  • இரும்பு உருக்கு தொழிற்சாலையின் தொழிலாளர்களுக்கான குடியிருப்பு உள்ளது.
  • பலத்த காயம் அடைந்த தொழிலாளி ராமேஸ்வரகுமார் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

கும்மிடிப்பூண்டி:

கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் தனியாருக்கு சொந்தமான இரும்பு உருக்கு தொழிற்சாலையின் தொழிலாளர்களுக்கான குடியிருப்பு உள்ளது. இங்கு வசித்து வரும் பீகாரை சேர்ந்த தொழிலாளி ராமேஸ்வரகுமாரை (வயது 24), அவருடன் பணியாற்றி வரும் நண்பர்களான சக தொழிலாளிகள் 4 பேர் இரும்பு கம்பியால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த தொழிலாளி ராமேஸ்வரகுமார் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து வடமாநில தொழிலாளியை இரும்பு கம்பியால் தாக்கிய அவரது நண்பர்களான பீகாரைச்சேர்ந்த பிர்ஜேஸ்ஷா (36), பிட்டு குமார் (27), நஜ்முன்ஹாசன் (27) மற்றும் ரித்துன்ஜெய் தாகூர் (28) ஆகிய 4 பேரை நேற்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News