கூடுவாஞ்சேரியில் அதிகாலையில் அரசு பஸ் கவிழ்ந்து 16 பேர் படுகாயம்
- திருவண்ணாமலையிலிருந்து அரசு பஸ் பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது.
- சாலையில் கவிழ்ந்து கிடந்த பஸ்சை கிரேன் மூலம் போலீசார் அப்புறப்படுத்தினர். இதனால் போக்குவரத்து சீரானது.
வண்டலூர்:
திருவண்ணாமலையிலிருந்து அரசு பஸ் பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது நேற்று அதிகாலை கூடுவாஞ்சேரி அருகே வரும் போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையில் ஒரு புறமாக கவிழ்ந்தது. இதில் பஸ்சில் பயணம் செய்த 16 பேர் காயம் அடைந்தனர். இதனைப் பற்றி தகவல் அறிந்த குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயம் அடைந்த பயணிகளை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதனையடுத்து சாலையில் கவிழ்ந்து கிடந்த பஸ்சை கிரேன் மூலம் போலீசார் அப்புறப்படுத்தினர். இதனால் போக்குவரத்து சீரானது. இந்த சம்பவத்தின் காரணமாக திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.